aip_quran
Translation

  العربية              தமிழ் 

1. Surah Al-Fatiha
2. Surah Al-Baqara
3. Surah Aal-e-Imran
4. Surah An-Nisa
5. Surah Al-Maidah
6. Surah Al-Anam
7. Surah Al-Araf
8. Surah Al-Anfal
9. Surah At-Tawbah
10. Surah Yunus
11. Surah Hud
12. Surah Yusuf
13. Surah Ar-Rad
14. Surah Ibrahim
15. Surah Al-Hijr
16. Surah An-Nahl
17. Surah Al-Isra
18. Surah Al-Kahf
19. Surah Maryam
20. Surah Taha
21. Surah Al-Anbiya
22. Surah Al-Hajj
23. Surah Al-Muminun
24. Surah An-Nur
25. Surah Al-Furqan
26. Surah Ash-Shuara
27. Surah An-Naml
28. Surah Al-Qasas
29. Surah Al-Ankabut
30. Surah Ar-Rum
31. Surah Luqman
32. Surah As-Sajdah
33. Surah Al-Ahzab
34. Surah Saba
35. Surah Fatir
36. Surah Ya-Sin
37. Surah As-Saffat
38. Surah Sad
39. Surah Az-Zumar
40. Surah Ghafir
41. Surah Fussilat
42. Surah Ash-Shuraa
43. Surah Az-Zukhruf
44. Surah Ad-Dukhan
45. Surah Al-Jathiya
46. Surah Al-Ahqaf
47. Surah Muhammad
48. Surah Al-Fath
49. Surah Al-Hujurat
50. Surah Qaf
51. Surah Adh-Dhariyat
52. Surah At-Tur
53. Surah An-Najm
54. Surah Al-Qamar
55. Surah Ar-Rahman
56. Surah Al-Waqiah
57. Surah Al-Hadid
58. Surah Al-Mujadila
59. Surah Al-Hashr
60. Surah Al-Mumtahanah
61. Surah As-Saf
62. Surah Al-Jumuah
63. Surah Al-Munafiqun
64. Surah Al-Taghabun
65. Surah At-Talaq
66. Surah At-Tahrim
67. Surah Al-Mulk
68. Surah Al-Qalam
69. Surah Al-Haqqah
70. Surah Al-Maarij
71. Surah Nuh
72. Surah Al-Jinn
73. Surah Al-Muzzammil
74. Surah Al-Muddaththir
75. Surah Al-Qiyamah
76. Surah Al-Insan
77. Surah Al-Mursalat
78. Surah An-Naba
79. Surah An-Naziat
80. Surah Abasa
81. Surah At-Takwir
82. Surah Al-Infitar
83. Surah Al-Mutaffifin
84. Surah Al-Inshiqaq
85. Surah Al-Buruj
86. Surah At-Tariq
87. Surah Al-Ala
88. Surah Al-Ghashiyah
89. Surah Al-Fajr
90. Surah Al-Balad
91. Surah Ash-Shams
92. Surah Al-Layl
93. Surah Ad-Duhaa
94. Surah Ash-Sharh
95. Surah At-Tin
96. Surah Al-Alaq
97. Surah Al-Qadr
98. Surah Al-Bayyinah
99. Surah Az-Zalzalah
100. Surah Al-Adiyat
101. Surah Al-Qariah
102. Surah At-Takathur
103. Surah Al-Asr
104. Surah Al-Humazah
105. Surah Al-Fil
106. Surah Quraysh
107. Surah Al-Maun
108. Surah Al-Kawthar
109. Surah Al-Kafirun
110. Surah An-Nasr
111. Surah Al-Masad
112. Surah Al-Ikhlas
113. Surah Al-Falaq
114. Surah An-Nas

80. Surah Abasa

80:1  عَبَسَ وَتَوَلَّىٰ
அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
80:2  أَن جَاءَهُ الْأَعْمَىٰ
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
80:3  وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
80:4  أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَىٰ
அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.
80:5  أَمَّا مَنِ اسْتَغْنَىٰ
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
80:6  فَأَنتَ لَهُ تَصَدَّىٰ
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
80:7  وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
80:8  وَأَمَّا مَن جَاءَكَ يَسْعَىٰ
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
80:9  وَهُوَ يَخْشَىٰ
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
80:10  فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
80:11  كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
80:12  فَمَن شَاءَ ذَكَرَهُ
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
80:13  فِي صُحُفٍ مُّكَرَّمَةٍ
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
80:14  مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍ
உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.
80:15  بِأَيْدِي سَفَرَةٍ
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
80:16  كِرَامٍ بَرَرَةٍ
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
80:17  قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
80:18  مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
80:19  مِن نُّطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
80:20  ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
80:21  ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ
பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்´ ஆக்குகிறான்.
80:22  ثُمَّ إِذَا شَاءَ أَنشَرَهُ
பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
80:23  كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ
(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
80:24  فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَىٰ طَعَامِهِ
எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
80:25  أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا
நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
80:26  ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
80:27  فَأَنبَتْنَا فِيهَا حَبًّا
பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
80:28  وَعِنَبًا وَقَضْبًا
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
80:29  وَزَيْتُونًا وَنَخْلًا
ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
80:30  وَحَدَائِقَ غُلْبًا
அடர்ந்த தோட்டங்களையும்,
80:31  وَفَاكِهَةً وَأَبًّا
பழங்களையும், தீவனங்களையும்-
80:32  مَّتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ
(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
80:33  فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ
ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
80:34  يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
80:35  وَأُمِّهِ وَأَبِيهِ
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
80:36  وَصَاحِبَتِهِ وَبَنِيهِ
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
80:37  لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
80:38  وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ
அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
80:39  ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ
சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
80:40  وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ
ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
80:41  تَرْهَقُهَا قَتَرَةٌ
அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
80:42  أُولَٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ
அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.