aip_quran
Translation

  العربية              தமிழ் 

1. Surah Al-Fatiha
2. Surah Al-Baqara
3. Surah Aal-e-Imran
4. Surah An-Nisa
5. Surah Al-Maidah
6. Surah Al-Anam
7. Surah Al-Araf
8. Surah Al-Anfal
9. Surah At-Tawbah
10. Surah Yunus
11. Surah Hud
12. Surah Yusuf
13. Surah Ar-Rad
14. Surah Ibrahim
15. Surah Al-Hijr
16. Surah An-Nahl
17. Surah Al-Isra
18. Surah Al-Kahf
19. Surah Maryam
20. Surah Taha
21. Surah Al-Anbiya
22. Surah Al-Hajj
23. Surah Al-Muminun
24. Surah An-Nur
25. Surah Al-Furqan
26. Surah Ash-Shuara
27. Surah An-Naml
28. Surah Al-Qasas
29. Surah Al-Ankabut
30. Surah Ar-Rum
31. Surah Luqman
32. Surah As-Sajdah
33. Surah Al-Ahzab
34. Surah Saba
35. Surah Fatir
36. Surah Ya-Sin
37. Surah As-Saffat
38. Surah Sad
39. Surah Az-Zumar
40. Surah Ghafir
41. Surah Fussilat
42. Surah Ash-Shuraa
43. Surah Az-Zukhruf
44. Surah Ad-Dukhan
45. Surah Al-Jathiya
46. Surah Al-Ahqaf
47. Surah Muhammad
48. Surah Al-Fath
49. Surah Al-Hujurat
50. Surah Qaf
51. Surah Adh-Dhariyat
52. Surah At-Tur
53. Surah An-Najm
54. Surah Al-Qamar
55. Surah Ar-Rahman
56. Surah Al-Waqiah
57. Surah Al-Hadid
58. Surah Al-Mujadila
59. Surah Al-Hashr
60. Surah Al-Mumtahanah
61. Surah As-Saf
62. Surah Al-Jumuah
63. Surah Al-Munafiqun
64. Surah Al-Taghabun
65. Surah At-Talaq
66. Surah At-Tahrim
67. Surah Al-Mulk
68. Surah Al-Qalam
69. Surah Al-Haqqah
70. Surah Al-Maarij
71. Surah Nuh
72. Surah Al-Jinn
73. Surah Al-Muzzammil
74. Surah Al-Muddaththir
75. Surah Al-Qiyamah
76. Surah Al-Insan
77. Surah Al-Mursalat
78. Surah An-Naba
79. Surah An-Naziat
80. Surah Abasa
81. Surah At-Takwir
82. Surah Al-Infitar
83. Surah Al-Mutaffifin
84. Surah Al-Inshiqaq
85. Surah Al-Buruj
86. Surah At-Tariq
87. Surah Al-Ala
88. Surah Al-Ghashiyah
89. Surah Al-Fajr
90. Surah Al-Balad
91. Surah Ash-Shams
92. Surah Al-Layl
93. Surah Ad-Duhaa
94. Surah Ash-Sharh
95. Surah At-Tin
96. Surah Al-Alaq
97. Surah Al-Qadr
98. Surah Al-Bayyinah
99. Surah Az-Zalzalah
100. Surah Al-Adiyat
101. Surah Al-Qariah
102. Surah At-Takathur
103. Surah Al-Asr
104. Surah Al-Humazah
105. Surah Al-Fil
106. Surah Quraysh
107. Surah Al-Maun
108. Surah Al-Kawthar
109. Surah Al-Kafirun
110. Surah An-Nasr
111. Surah Al-Masad
112. Surah Al-Ikhlas
113. Surah Al-Falaq
114. Surah An-Nas

78. Surah An-Naba

78:1  عَمَّ يَتَسَاءَلُونَ
எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
78:2  عَنِ النَّبَإِ الْعَظِيمِ
மகத்தான அச்செய்தியைப் பற்றி,
78:3  الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,
78:4  كَلَّا سَيَعْلَمُونَ
அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
78:5  ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.
78:6  أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
78:7  وَالْجِبَالَ أَوْتَادًا
இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
78:8  وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا
இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.
78:9  وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا
மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
78:10  وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا
அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.
78:11  وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا
மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.
78:12  وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا
உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.
78:13  وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا
ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
78:14  وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا
அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.
78:15  لِّنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا
அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.
78:16  وَجَنَّاتٍ أَلْفَافًا
(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).
78:17  إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا
நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
78:18  يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا
ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
78:19  وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا
இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.
78:20  وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
78:21  إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا
நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
78:22  لِّلطَّاغِينَ مَآبًا
வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக.
78:23  لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا
அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.
78:24  لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا
அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.
78:25  إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا
கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.
78:26  جَزَاءً وِفَاقًا
(அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
78:27  إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا
நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.
78:28  وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا
அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.
78:29  وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا
நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.
78:30  فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا
"ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
78:31  إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.
78:32  حَدَائِقَ وَأَعْنَابًا
தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.
78:33  وَكَوَاعِبَ أَتْرَابًا
ஒரே வயதுள்ள கன்னிகளும்.
78:34  وَكَأْسًا دِهَاقًا
பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).
78:35  لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا
அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.
78:36  جَزَاءً مِّن رَّبِّكَ عَطَاءً حِسَابًا
(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.
78:37  رَّبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمَٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا
(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.
78:38  يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًا
ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.
78:39  ذَٰلِكَ الْيَوْمُ الْحَقُّ ۖ فَمَن شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ مَآبًا
அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.
78:40  إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا
நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான்.