aip_quran
Translation

  العربية              தமிழ் 

1. Surah Al-Fatiha
2. Surah Al-Baqara
3. Surah Aal-e-Imran
4. Surah An-Nisa
5. Surah Al-Maidah
6. Surah Al-Anam
7. Surah Al-Araf
8. Surah Al-Anfal
9. Surah At-Tawbah
10. Surah Yunus
11. Surah Hud
12. Surah Yusuf
13. Surah Ar-Rad
14. Surah Ibrahim
15. Surah Al-Hijr
16. Surah An-Nahl
17. Surah Al-Isra
18. Surah Al-Kahf
19. Surah Maryam
20. Surah Taha
21. Surah Al-Anbiya
22. Surah Al-Hajj
23. Surah Al-Muminun
24. Surah An-Nur
25. Surah Al-Furqan
26. Surah Ash-Shuara
27. Surah An-Naml
28. Surah Al-Qasas
29. Surah Al-Ankabut
30. Surah Ar-Rum
31. Surah Luqman
32. Surah As-Sajdah
33. Surah Al-Ahzab
34. Surah Saba
35. Surah Fatir
36. Surah Ya-Sin
37. Surah As-Saffat
38. Surah Sad
39. Surah Az-Zumar
40. Surah Ghafir
41. Surah Fussilat
42. Surah Ash-Shuraa
43. Surah Az-Zukhruf
44. Surah Ad-Dukhan
45. Surah Al-Jathiya
46. Surah Al-Ahqaf
47. Surah Muhammad
48. Surah Al-Fath
49. Surah Al-Hujurat
50. Surah Qaf
51. Surah Adh-Dhariyat
52. Surah At-Tur
53. Surah An-Najm
54. Surah Al-Qamar
55. Surah Ar-Rahman
56. Surah Al-Waqiah
57. Surah Al-Hadid
58. Surah Al-Mujadila
59. Surah Al-Hashr
60. Surah Al-Mumtahanah
61. Surah As-Saf
62. Surah Al-Jumuah
63. Surah Al-Munafiqun
64. Surah Al-Taghabun
65. Surah At-Talaq
66. Surah At-Tahrim
67. Surah Al-Mulk
68. Surah Al-Qalam
69. Surah Al-Haqqah
70. Surah Al-Maarij
71. Surah Nuh
72. Surah Al-Jinn
73. Surah Al-Muzzammil
74. Surah Al-Muddaththir
75. Surah Al-Qiyamah
76. Surah Al-Insan
77. Surah Al-Mursalat
78. Surah An-Naba
79. Surah An-Naziat
80. Surah Abasa
81. Surah At-Takwir
82. Surah Al-Infitar
83. Surah Al-Mutaffifin
84. Surah Al-Inshiqaq
85. Surah Al-Buruj
86. Surah At-Tariq
87. Surah Al-Ala
88. Surah Al-Ghashiyah
89. Surah Al-Fajr
90. Surah Al-Balad
91. Surah Ash-Shams
92. Surah Al-Layl
93. Surah Ad-Duhaa
94. Surah Ash-Sharh
95. Surah At-Tin
96. Surah Al-Alaq
97. Surah Al-Qadr
98. Surah Al-Bayyinah
99. Surah Az-Zalzalah
100. Surah Al-Adiyat
101. Surah Al-Qariah
102. Surah At-Takathur
103. Surah Al-Asr
104. Surah Al-Humazah
105. Surah Al-Fil
106. Surah Quraysh
107. Surah Al-Maun
108. Surah Al-Kawthar
109. Surah Al-Kafirun
110. Surah An-Nasr
111. Surah Al-Masad
112. Surah Al-Ikhlas
113. Surah Al-Falaq
114. Surah An-Nas

56. Surah Al-Waqiah

56:1  إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ
மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால்
56:2  لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ
அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.
56:3  خَافِضَةٌ رَّافِعَةٌ
அது (தீயோரைத்) தாழ்த்தி விடும், (நல்லோரை) உயர்த்தி விடும்.
56:4  إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا
பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.
56:5  وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا
இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,
56:6  فَكَانَتْ هَبَاءً مُّنبَثًّا
பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.
56:7  وَكُنتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً
(அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள்.
56:8  فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ
(முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)
56:9  وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ
(இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)
56:10  وَالسَّابِقُونَ السَّابِقُونَ
(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.
56:11  أُولَٰئِكَ الْمُقَرَّبُونَ
இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
56:12  فِي جَنَّاتِ النَّعِيمِ
இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.
56:13  ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ
முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,
56:14  وَقَلِيلٌ مِّنَ الْآخِرِينَ
பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -
56:15  عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ
(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது -
56:16  مُّتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ
ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
56:17  يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُونَ
நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.
56:18  بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ
தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்).
56:19  لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
(அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள், மதிமயங்கவுமாட்டார்கள்.
56:20  وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ
இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் -
56:21  وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ
விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).
56:22  وَحُورٌ عِينٌ
(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.
56:23  كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِ
மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).
56:24  جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ
(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.
56:25  لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا
அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள்.
56:26  إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا
´ஸலாம், ஸலாம்´ என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).
56:27  وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ
இன்னும் வலப்புறத்தார்கள் - வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)
56:28  فِي سِدْرٍ مَّخْضُودٍ
(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்:
56:29  وَطَلْحٍ مَّنضُودٍ
(நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடை வாழை மரத்தின் கீழும்:
56:30  وَظِلٍّ مَّمْدُودٍ
இன்னும், நீண்ட நிழலிலும்,
56:31  وَمَاءٍ مَّسْكُوبٍ
(சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும்,
56:32  وَفَاكِهَةٍ كَثِيرَةٍ
ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் -
56:33  لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ
அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை -
56:34  وَفُرُشٍ مَّرْفُوعَةٍ
மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்).
56:35  إِنَّا أَنشَأْنَاهُنَّ إِنشَاءً
நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி,
56:36  فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا
அப்பெண்களைக் கன்னிகளாகவும்,
56:37  عُرُبًا أَتْرَابًا
(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,
56:38  لِّأَصْحَابِ الْيَمِينِ
வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).
56:39  ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ
முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும்,
56:40  وَثُلَّةٌ مِّنَ الْآخِرِينَ
பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்).
56:41  وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ
இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?)
56:42  فِي سَمُومٍ وَحَمِيمٍ
(அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் -
56:43  وَظِلٍّ مِّن يَحْمُومٍ
அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.
56:44  لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ
(அங்கு) குளிர்ச்சியுமில்லை, நலமுமில்லை.
56:45  إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ
நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர்.
56:46  وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنثِ الْعَظِيمِ
ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர்.
56:47  وَكَانُوا يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ
மேலும், அவர்கள், "நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?" என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.
56:48  أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ
"அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?" என்றும் கூறினர்.)
56:49  قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ
(நபியே!) நீர் கூறும்: "(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.
56:50  لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ
"குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.
56:51  ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ
அதற்குப் பின்னர்: "பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,
56:52  لَآكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ
ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.
56:53  فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ
ஆகவே, "அதைக் கொண்டே வயிறுகளை நிரப்புவீர்கள்.
56:54  فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ
அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள்.
56:55  فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ
"பின்னும் ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்."
56:56  هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ
இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும்.
56:57  نَحْنُ خَلَقْنَاكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ
நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?
56:58  أَفَرَأَيْتُم مَّا تُمْنُونَ
(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
56:59  أَأَنتُمْ تَخْلُقُونَهُ أَمْ نَحْنُ الْخَالِقُونَ
அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?
56:60  نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ
உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.
56:61  عَلَىٰ أَن نُّبَدِّلَ أَمْثَالَكُمْ وَنُنشِئَكُمْ فِي مَا لَا تَعْلَمُونَ
(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).
56:62  وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْأَةَ الْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ
முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?
56:63  أَفَرَأَيْتُم مَّا تَحْرُثُونَ
(இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?
56:64  أَأَنتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ
அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
56:65  لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ
நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
56:66  إِنَّا لَمُغْرَمُونَ
"நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.
56:67  بَلْ نَحْنُ مَحْرُومُونَ
"மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).
56:68  أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ
அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?
56:69  أَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ
மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?
56:70  لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
56:71  أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ
நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?
56:72  أَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنشِئُونَ
அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?
56:73  نَحْنُ جَعَلْنَاهَا تَذْكِرَةً وَمَتَاعًا لِّلْمُقْوِينَ
நாம் அதனை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு பயனளிக்கப்பதற்காகவும் உண்டாக்கினோம்.
56:74  فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.
56:75  فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ
நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
56:76  وَإِنَّهُ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ
நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான் பிரமாணமாகும்.
56:77  إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ
நீச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.
56:78  فِي كِتَابٍ مَّكْنُونٍ
பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.
56:79  لَّا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ
தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.
56:80  تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ
அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.
56:81  أَفَبِهَٰذَا الْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ
அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா?
56:82  وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ
நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா?
56:83  فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ
மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது -
56:84  وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ
அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
56:85  وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَٰكِن لَّا تُبْصِرُونَ
ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.
56:86  فَلَوْلَا إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ
எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -
56:87  تَرْجِعُونَهَا إِن كُنتُمْ صَادِقِينَ
நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!
56:88  فَأَمَّا إِن كَانَ مِنَ الْمُقَرَّبِينَ
(இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.
56:89  فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ
அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு.
56:90  وَأَمَّا إِن كَانَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ
அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால்,
56:91  فَسَلَامٌ لَّكَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ
"வலப்புறத்தோரே! உங்களுக்கு "ஸலாம்" உண்டாவதாக" (என்று கூறப்படும்).
56:92  وَأَمَّا إِن كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ
ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால்
56:93  فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ
கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும்.
56:94  وَتَصْلِيَةُ جَحِيمٍ
நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்).
56:95  إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ
நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும்.
56:96  فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.