aip_quran
Translation

  العربية              தமிழ் 

1. Surah Al-Fatiha
2. Surah Al-Baqara
3. Surah Aal-e-Imran
4. Surah An-Nisa
5. Surah Al-Maidah
6. Surah Al-Anam
7. Surah Al-Araf
8. Surah Al-Anfal
9. Surah At-Tawbah
10. Surah Yunus
11. Surah Hud
12. Surah Yusuf
13. Surah Ar-Rad
14. Surah Ibrahim
15. Surah Al-Hijr
16. Surah An-Nahl
17. Surah Al-Isra
18. Surah Al-Kahf
19. Surah Maryam
20. Surah Taha
21. Surah Al-Anbiya
22. Surah Al-Hajj
23. Surah Al-Muminun
24. Surah An-Nur
25. Surah Al-Furqan
26. Surah Ash-Shuara
27. Surah An-Naml
28. Surah Al-Qasas
29. Surah Al-Ankabut
30. Surah Ar-Rum
31. Surah Luqman
32. Surah As-Sajdah
33. Surah Al-Ahzab
34. Surah Saba
35. Surah Fatir
36. Surah Ya-Sin
37. Surah As-Saffat
38. Surah Sad
39. Surah Az-Zumar
40. Surah Ghafir
41. Surah Fussilat
42. Surah Ash-Shuraa
43. Surah Az-Zukhruf
44. Surah Ad-Dukhan
45. Surah Al-Jathiya
46. Surah Al-Ahqaf
47. Surah Muhammad
48. Surah Al-Fath
49. Surah Al-Hujurat
50. Surah Qaf
51. Surah Adh-Dhariyat
52. Surah At-Tur
53. Surah An-Najm
54. Surah Al-Qamar
55. Surah Ar-Rahman
56. Surah Al-Waqiah
57. Surah Al-Hadid
58. Surah Al-Mujadila
59. Surah Al-Hashr
60. Surah Al-Mumtahanah
61. Surah As-Saf
62. Surah Al-Jumuah
63. Surah Al-Munafiqun
64. Surah Al-Taghabun
65. Surah At-Talaq
66. Surah At-Tahrim
67. Surah Al-Mulk
68. Surah Al-Qalam
69. Surah Al-Haqqah
70. Surah Al-Maarij
71. Surah Nuh
72. Surah Al-Jinn
73. Surah Al-Muzzammil
74. Surah Al-Muddaththir
75. Surah Al-Qiyamah
76. Surah Al-Insan
77. Surah Al-Mursalat
78. Surah An-Naba
79. Surah An-Naziat
80. Surah Abasa
81. Surah At-Takwir
82. Surah Al-Infitar
83. Surah Al-Mutaffifin
84. Surah Al-Inshiqaq
85. Surah Al-Buruj
86. Surah At-Tariq
87. Surah Al-Ala
88. Surah Al-Ghashiyah
89. Surah Al-Fajr
90. Surah Al-Balad
91. Surah Ash-Shams
92. Surah Al-Layl
93. Surah Ad-Duhaa
94. Surah Ash-Sharh
95. Surah At-Tin
96. Surah Al-Alaq
97. Surah Al-Qadr
98. Surah Al-Bayyinah
99. Surah Az-Zalzalah
100. Surah Al-Adiyat
101. Surah Al-Qariah
102. Surah At-Takathur
103. Surah Al-Asr
104. Surah Al-Humazah
105. Surah Al-Fil
106. Surah Quraysh
107. Surah Al-Maun
108. Surah Al-Kawthar
109. Surah Al-Kafirun
110. Surah An-Nasr
111. Surah Al-Masad
112. Surah Al-Ikhlas
113. Surah Al-Falaq
114. Surah An-Nas

77. Surah Al-Mursalat

77:1  وَالْمُرْسَلَاتِ عُرْفًا
தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக
77:2  فَالْعَاصِفَاتِ عَصْفًا
வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-
77:3  وَالنَّاشِرَاتِ نَشْرًا
(மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-
77:4  فَالْفَارِقَاتِ فَرْقًا
(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-
77:5  فَالْمُلْقِيَاتِ ذِكْرًا
(இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-
77:6  عُذْرًا أَوْ نُذْرًا
(அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)
77:7  إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ
நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.
77:8  فَإِذَا النُّجُومُ طُمِسَتْ
இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-
77:9  وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ
மேலும், வானம் பிளக்கப்படும் போது-
77:10  وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ
அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-
77:11  وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ
மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-
77:12  لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ
எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?
77:13  لِيَوْمِ الْفَصْلِ
தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.
77:14  وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ
மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
77:15  وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
(நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.
77:16  أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ
முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?
77:17  ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ
பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.
77:18  كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ
குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).
77:19  وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:20  أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّاءٍ مَّهِينٍ
அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?
77:21  فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَّكِينٍ
பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்.
77:22  إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ
ஒரு குறிப்பிடட (கால) அளவு வரை.
77:23  فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ
இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.
77:24  وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:25  أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا
பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?
77:26  أَحْيَاءً وَأَمْوَاتًا
உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது).
77:27  وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُم مَّاءً فُرَاتًا
அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.
77:28  وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:29  انطَلِقُوا إِلَىٰ مَا كُنتُم بِهِ تُكَذِّبُونَ
"நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
77:30  انطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ
மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.
77:31  لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ
(அது) நிழலளிப்பதுமல்ல, (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.
77:32  إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ
நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.
77:33  كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ
நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.
77:34  وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:35  هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ
இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள்.
77:36  وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ
அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகழ் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
77:37  وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:38  هَٰذَا يَوْمُ الْفَصْلِ ۖ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ
இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்).
77:39  فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ
எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்.
77:40  وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:41  إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.
77:42  وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ
இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.
77:43  كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
"நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள் இன்னும் பருகுங்கள்" (என்று கூறப்படும்).
77:44  إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்.
77:45  وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:46  كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ
(பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே.
77:47  وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:48  وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ
´நீங்கள் குனிந்து வணங்குங்கள்´ என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்.
77:49  وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:50  فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ
எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?